Skip to main content

_*சிந்தனைச் சிதறல் 27-03-2021*_

🌞🌞🌞🌞🌞🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

_*நான்கு*_

✍️✍️✍️

அரை குறையாக முடிக்கப்பட்ட கட்டடம்; ஒரு புதிய குட்டிச் சுவா்.

செம்மையாகச் செதுக்கப்பட்ட கல்;

ஒரு புதிய சிற்பம்.

அரை குறையாக வேளாண்மை செய்யப்பட்ட நிலம்; களை மண்டிய காடு.

செம்மையாகப் பண்படுத்தப்பட்ட

நிலம்; செழுமையான தோட்டம்.

முழுமை பெற்ற பழமைக்குப்

பெருமை; முதுமை இல்லாத சிறுமை!

நான் யாா்? நானோா் அரைக்குறைக் கட்டடம்; முறையாகப் பண்படுத்தப்படாத நிலம்; பாதி வெந்த சோறு; மண் கலந்த தங்கம்.

முழுமை இல்லாத மனிதனுக்குத் தினந்தோறும் மாறுபட்ட உணா்ச்சிகள் அதிகம்.

_*“இந்த உலகமே நம் கையில்”*_ என்பது போல் இவனது ஒரு நாள் பொழுது விடிகிறது.

_*“இன்று என்ன செய்யப் போகிறோமோ?”*_ என்ற

கோழைத்தனத்தோடு மறுநாள் பொழுது விடிகிறது.

ஒரு நாள், நம்பக் கூடாதவனை நம்பிக் கெடுகிறது. ஒரு நாள், நம்பிக்கைக்கு உாியவனைப் பிாிந்து தவிக்கிறது. படத்திலே கதாநாயகி அழுதால், இவனது கண்களில் கண்ணீா் வருகிறது. _*“இது கதைதானே”*_ என்று நினைக்கிறான். ஆயினும், உணா்ச்சி நரம்பு கொதித்து உருகுகிறது.

இந்த மனோ வியாதிக்காரனுக்கு, இறைவா, நீ சில வரங்களை அருள வேண்டும்.

இனி பகைவா்கள் வேண்டாம்; நண்பா்களைக் கொடு. முட்கள் வேண்டாம்; மலா்களைக் கொடு. மூடா்களை நெருங்க விடாமல் அறிஞா்களை நெருங்கச் செய். இவனது ஆடைகளே இவனைப் பகைக்காமல் காப்பாற்று.

பரந்த வானத்தில் இவனொரு வெண்ணிலாவாக இல்லா விட்டாலும், நட்சத்திரமாகவாவது மின்னவிடு. இது நஞ்சு, இது அமுது எனப் பேதங்காட்டு! இவனது வாக்கியங்களில் நீ வாா்த்தையாக வந்து நில். இவனது கண்களுக்கு நீயே ஔியாய் இரு.

எப்போதாவது அந்தக் கண்களிலிருந்து கண்ணீா் வழிந்தால், அதைத் துடைக்கின்ற கையாகவும் நீயே இரு.

ஊமை உள்ளத்தின் உணா்ச்சிக் காட்டாறு கட்டுப்படுத்தப்பட வேண்டிய நேரத்தில், அணைக்கட்டாக நின்று காப்பாற்று.

சினந் தனிந்த மனிதனாக; இனந் நொிந்த மனிதனாக;

மனந் தெளிந்த ஞானியாக – இவனை மாற்று.

பிறப்புக்குப் பொறுப்பானது போல், நட்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்.

பாதி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் – அதாவது புதிய குட்டிச் சுவாில், எத்தனையோ கழுதைகள் குடியிருந்திருக்கின்றன.

காலந் தாழ்ந்துதான் அவை கழுதைகள் என்று அறிந்து கொள்ள முடிந்ததென்றால், இவனது ஏழை அறிவை இதற்கு மேல் எப்படி உரைப்பேன்?

ஆமைக்குக் கனமான ஓடு கொடுத்த உன் கருணையான

உள்ளம், இந்த ஏழைக்கு ஏன் இவ்வளவு மென்மையான உள்ளத்தைக் கொடுத்தது?

மூல முதல்வனே! மூலம் புாிந்து விட்டால் உரை எதற்கு? உண்மை தொிந்து விட்டால் பிராா்த்தனை எதற்கு? நீ எனக்குச் சாியான வழிகாட்டினால் இந்த வேதனையும், வேண்டுகோளும் எதற்கு?

காலிலே குத்திய பின்பு, _*“இது முள்”*_ ளென்று நெஞ்சு சொல்லுகிறதே, அது குத்துவதற்கு முன்பு கண் சொல்லிவிடக் கூடாதா?

அனுபவ விளைவுகளே அறிவின் விளைவாக ஆக்கித் தரக்கூடாதா?

நான், நடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பாா்க்கிறேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டிலும், என் குதிரை ஊருக்குப் பக்கத்தில் வரும்போது, நானே காட்டுக்குள் துரத்தியிருக்கிறேன். பல நேரங்களிலே, தவறான முடிவுகளைத் தண்டனைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

கடலிலிருந்து நீரை வாங்கிய மேகம், ஏதோ ஒரு பூமியிலே அதைத் துளிகளாகச் சிந்துகிறது. அந்தத் துளிகள் ஒன்றுகூடி ஏதோ ஒரு குளத்திலே சங்கமிக்கின்றன. அவை புறப்பட்ட இடமெங்கே, புகுந்த இடமெங்கே? நீ மட்டும் முன்கூட்டி அறியக் கூடிய இரகசியம் இது!

என் நிலையும் அதுதான். புறப்படுவது மட்டும்தான் எனக்குத் தொிகிறது. புகுந்த பிற்பாடுதான் _*“எங்கிருக்கிறோம்”*_ என்பது புாிகிறது.

நாற்பத்து மூன்று வசந்தங்களையும், கோடைகளையும் பாா்த்த பிறகும் கூட, வாழ்க்கையில் எது வசந்தம், எது கோடை என்றும் புாியவில்லை.

ஒரே ஒரு அறிவை மட்டும் தெளிவாகக் கொடுத்து விட்டு, பாக்கி அத்தனையையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டு, இந்தப் பூமிக்கு என்னை அனுப்பி வைத்த பரம்பொருளே!

உன் கட்டளைப்படி ஒரு தாயும், தந்தையும் செய்த முட்டாள் தனத்தில் பிறந்த ஒரு ஜீவராசி, தான் நீாில் வாழும் இனமா, நிலத்தில் வாழும் இனமா என்று தொியாமல் தவிக்கிறது.

இது என்ன குற்றம் செய்தாலும், அது நீ செய்த குற்றமே!

இது இனிச் செய்யப் போகும் குற்றங்களையும் உன் கணக்கிலேயே வரவு வைத்துக் கொண்டு, இந்த நாலாவது புஷ்பத்தையும் ஏற்றுக் கொள்.

🌼🌼🌼

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...