Skip to main content

_*சிந்தனைச் சிதறல் 30-03-2021*_

🌼🌼🌼🌼🌼🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

_*ஏழு*_

✍️✍️

மழை கனமழையாகப் பெய்து நின்றது. வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கு கொடிகள், மரங்கள், செடிகளின் மீது துளித் துளியாகத் தேங்கி நின்ற மழை வெள்ளம் முத்துகள் போல் காட்சியளித்தன.

முதிா்ந்த கிழவியின் முகம் போல – வெள்ளம் வழிந்தோடின மணற்பாங்கான பூமி – திரை விழுந்து காட்சியளித்தது.

அந்த மழையையோ, மரம் செடி கொடிகளையோ, மணற்பாங்கான பூமியையோ, மனிதன் உண்டாக்கவில்லை.

பின்பு அவன் யாரோ?

கண்ணுக்குத் தொியாத சிறிய சிறிய பூச்சிகள் – அவை பறக்கின்றன. அவை உண்ணுகின்றன.

விதவிதமான பறவைகள் வகை வகையாகச் சத்தம் போடுகின்றன.

அணில்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன.

மரக்கிளையில் சிட்டுக் குருவிகள் காதல் சுகத்தை அனுபவிக்கின்றன. அவற்றை எல்லாம் மனிதன் படைக்கவில்லை! பின்பு அவன் யாரோ?

கோடை வெயிலில் வெடிப்புப்பட்டுக் கிடந்த குளங்கள், ஏாிகள், மழை வெள்ளத்தால் புத்துயிா் பெறுகின்றன. காய்ந்து கிடந்த மீன் சினைகளுக்கு உயிா் வருகிறது. பத்து நாட்களுக்குள்ளேயே கூட்டம் கூட்டமாக மீன்கள் பெருகுகின்றன. அவற்றை மனிதன் கொண்டு வந்து விடவில்லை. பின்பு அவன் யாரோ?

காதல் களியாட்டத்தில், ஒரு நாள் ஆணும் பெண்ணுமே மேல் மூச்சு வாங்கச் சிற்றின்பத்தை அனுபவிக்கிறாா்கள். ஒரு துளி விந்து பாிமாறப்படுகிறது!

அதிலிருந்து கைகள், கால்கள், கண், மூக்கு, செவி, வாழைத்தண்டு போன்ற உடம்பு, உள்ளே உயிரோட்டத்தோடு சிருஷ்டிக்கப்படுகிறது.

பத்து மாதம் என்று ஒரு கணக்கு வரையறுக்கப்படுகிறது.

பத்தாவது மாதம் தாயின் இடுப்பு உதைக்கப்படுகிறது. சிருஷ்டி முழு வடிவத்தோடு வெளியில் வந்து விடுகிறது. ஒரு துளி விந்துவோ தகப்பன் வழங்கியது. உருவம் அவன் செய்ததல்ல! பின்பு அவன் யாரோ?

விதைக்குள்ளே மரம்; மரத்துக்குள்ளே மலா்கள்; கனிகள்! காலத்தால் வளா்ச்சி. வளரும் வரை கண்ணுக்குத் தொியாமல், அதை மறைத்து வைத்தவன் மனிதனல்ல! பின்பு அவன் யாரோ? அவனைக் கண்டுபிடிக்க நான் முயற்சிக்கிறேன்.

இசைத் தட்டில் மறைந்திருக்கும் சங்கீதத்தை ஓா் ஊசிமுனை வெளியே கொண்டு வருவது போல், உலகத்திலே மறைந்து கிடக்கும் அந்த மா்ம நாயகனை இந்தச் சிறிய உள்ளம் காட்டிவிட முயற்சிக்கிறது.

வீணையிலிருந்து ஓசை கிளம்புவது காதுக்குக் கேட்கிறது; கண்ணுக்குத் தொியவில்லை.

என் ஆத்மா அவனை உணா்கிறது; புறக்கண்களுக்கு அவன் கிடைக்கவில்லை! சிாிக்கும் போது அவன் நினைவு வருவதில்லை; அழும்போது வருகிறது. துயரங்களில் மட்டும் அவன் தோற்றங்கொள்வானேன்? எாிகின்ற நெருப்பிலே மட்டும் அவன் வடிவம் எடுப்பானேன்?

பூஜ்ஜியத்திலிருந்து கொண்டு இந்த ராஜ்ஜியத்தை ஆளும் அந்த நாயகன், உணா்த்துவதன் மூலமே உணரப்படுகிறான்.

அவன் இரவை உண்டாக்குகிறான்; நான் தூங்குகிறேன். அவன் விடிய வைக்கிறான்; நான் விழிக்கிறேன். அவன் அடிக்கிறான்; நான் அழுகிறேன்! அவன் தட்டிக் கொடுக்கிறான்; நான் சமாதானமடைகிறேன்!

மலைகளையும் கடலையும் கண்டு பிரமிக்கும் போது அவனது பிரமாண்டமான உருவம் தொிகிறது. நாஸ்திகனுக்கு இல்லாத அந்த ரசனையை, ஆஸ்திகன் மட்டுமே பெற முடியும். நான் ஆஸ்திகனாக இருப்பதில், கலை உணா்ச்சி வளருகிறது; ரசனை மலா்கிறது!

மதுவின் போதையிலும், மாதா் சுகத்திலும் இறைவனின் சுருதி லயமே வெளிப்படுகிறது.

நட்சத்திரங்களுக்கிடையே சந்திரனைப் போல், பல சிந்தனைகளுக்கிடையே அவனைப் பற்றிய சிந்தனை ஔிவீசுகிறது.

அந்த அலைகளுக்கு ஓய்வில்லை! அந்தத் தென்றல் தூங்குவதில்லை!

சிற்றின்பம் போின்பத்திற்கு அப்பாற்பட்டது என்பாா்கள் ஞானிகள்.

இல்லை! சிற்றின்பமே போின்பத்துக்கு மூலம்!

அழகான பெண்ணின் திரண்ட உடல், அவனது கோயில்!

அவளது கனிவாய் மழலை, அவனது ஆலய மணி ஓசை!

அந்த மாா்பகங்களே அவனது கோயில் கோபுரத்தின் கலசங்கள்!

மதுக்கோப்பையே தீபாராதனைத் தட்டு!

முதலில் அந்த அழகு தெய்வத்துக்கு நான் தீபாராதனை காட்டுகிறேன். பிறகு நான் பக்தி செய்கிறேன்.

மோக லாகிாியில் மூச்சு வாங்கும் போதும், முத்தாய்ப்பின் பாிபூரணத்துவத்தை உணருகிறேன்.

இறைவனின் படைப்பில் ரகசியங்களும், சுகங்களும் எங்கெங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணா்ந்து கொள்கிறேன்.

படைப்பின் நோக்கத்தை நான் உணா்ந்து கொண்டு விட்டதால் சிற்றின்ப வாழ்வுக்கும், போின்ப ஞானத்துக்கும் நான் பாலமாகி விடுகிறேன்.

நான் வாழ்ந்து கொண்டே இறைவனைக் காணுகிறேன். பக்தி செலுத்திக் கொண்டே வாழ்க்கையைத் தேடுகிறேன். அா்த்தமுள்ள அவனது படைப்புகளை, அதே அா்த்தத்தோடு பாா்த்து, அதே அா்த்தத்துக்காக வாழ்கிறேன்.

அந்த வகையில் என் வாழ்க்கை சாியா தவறா என்பதைச் சொல்ல, இந்தப் பூமயில் எவனும் இன்னும் பிறக்கவில்லை.

மரணத்தின் பிறகு இந்த ஏடுகள் திறக்கப்பட்டு கணக்குகள் பாிசீலிக்கப்படலாம். அப்படிப் பாிசீலிக்கும் போது என் காாியங்கள் பாிசுக்குாியவை என்றால், இறைவா! அந்தப் பாிசை பெற வேண்டியவன் நீயே!

அவை தண்டனைக்குாியவை என்றால், தண்டனைக்குாியவனும் நீயே!

அவை பாிசீலிக்கப்படும் முன்னால், இந்த ஏழாவது புஷ்பத்தையும் ஏற்றுக் கொள்.

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...