Skip to main content

*தூய காற்று அதிகரிக்க அதிகரிக்க தீய காற்று குறையும்.!நற்குணங்கள் அதிகரிக்க அதிகரிக்க தீய குணங்கள் மறையும்.!!*

*அனைத்துக் கேள்விகளுக்கும் காலம் பதில் சொல்லத்தான் செய்கிறது.. நாம் தான் கவனிக்கத்தவறி விடுகிறோம்.!!*

*அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட.. பிடித்தவர்கள் தான் அழகாய்த் தெரிகிறார்கள் என்பதே உண்மை..!!*

*தயங்கி நிற்காதீர்..!தன்னடக்கம் கூட தவறாகக் தெரியும்.. சிலரின் கண்களுக்கு..!!*

*ஒருவரை காயப்படுத்தி விட்டு, மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமல்ல..*

*அவர் அதை மறந்து ஏற்றுக் கொள்வதே மிகச் சிறந்த விஷயம்!*

*பிற மனிதர்களிடம் சிறிதளவேனும் ஆணவம் கொள்ளுங்கள். இல்லையெனில் அவர்கள் மனதில் கோமாளியாக சித்தரிக்கப்படுவீர்.*

*முடிந்ததும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்…… வாழ்க்கையும் வாக்கியமும்……..!!*

*படிச்சவன் பாடம் நடத்துறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்..!!*

*நீங்கள் யாரென்று உங்களுக்கே புரிய வைக்கும் ஆயுதம் தான்..‘அவமானம்’..!!*

*எதிரிகளை எப்போதும் மன்னித்துக் கொண்டே இருங்கள்.. அதை விட வேறெதுவும் அவர்களை அவமானப்படுத்தப்போவதில்லை..!!*

*விருப்பங்களுக்கு விலைகள் அதிகமாக இருக்கலாம்..!ஆனால்… மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்ததல்ல..!!*

*எல்லோருக்குள்ளும்காயங்கள் இருக்கிறது.. ஆனால்.. எல்லோரும் எல்லோருக்கும் தழும்புகளைக் காட்டுவதில்லை..!!*

*“விஷம் அருந்தி” உயிர் பிழைத்தவர்களும் உண்டு.. சில “விசயம் அறிந்து” உயிர் பிரிந்தவர்களும் உண்டு..!!*

*#வாழ்த்துக்கள்.*

*#வாழ்க_வளமுடன்.*

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...