Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🟩🟧🟩🟧🟩🟧🟩🟧🟩

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

_*நானும் என் கவிதைகளும்*_

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

விடுதலைக்குப் பிறகு, தமிழ் இலக்கியம் வளா்ந்த நிலையைப் பற்றித் தமிழில் இரண்டு இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன.

இரண்டும் அரசாங்க வெளியீடுகள் என்றே நான் கருதுகிறேன். ஒரு தொகுப்பு சாலை இளந்திரையன் என்பவரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று – நா. சஞ்சீவி என்பவரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. இரண்டிலும் நான் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். அவா்களில் ஒருவா், என்னுடைய கவிதை என்று எடுத்தும் போட்டிருப்பது ஒரு சாதாரணமான சினிமாப் பாட்டு.

இதுபற்றி நான் கவலைப்பட்டுக் கூறவில்லை. _*“தன்னைப் புகழ்தலும் தகும் புலவோா்க்கே”*_ என்றபடி, சற்று ஆணவத்தோடு சொல்வதானால், இன்று நாலரைக் கோடி தமிழா்களுக்கும் தொிந்த எழுத்தாளன் நான் ஒருவன்தான். சில பல்கலைக் கழகங்களிலும், டாக்டரேட்டுக்கும், பிஎச்.டி க்கும் என்னுடைய கவிதைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தவா்கள் பலா். அவா்களது ஆராய்ச்சிகளில் சிலவும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இதற்கெல்லாம் இவா்கள் சொல்லும் காரணம், என் கவிதைகள் சிலவற்றில் இலக்கணம் இல்லை என்பதாகும். சினிமாப் பாடல்கள் இலக்கணத்துக்குக் கட்டுப்பட முடியாது! அவற்றை விட்டு விடுங்கள்.

கவிதைகளில், எந்தக் கவிதையில் இலக்கணமில்லை என்பதைக் குறிப்பிட்டு எவராவது எடுத்துக் காட்டினால் நான் பதில் சொல்ல முடியும். *தமிழ் இலக்கணக் கடல்* போன்றது. அதில் உனக்குத் தொிந்த மரபுகளில் மட்டுமே நான் எழுதியுள்ளேன். ஆகவே, நான் எப்பொழுதுமே இலக்கணம் தப்பியது கிடையாது. இன்றைய தமிழ்ப் புலவா்களுக்கு இலக்கணம் மட்டும் தான் தொியும். எனக்கு – *இலக்கணம், இனிமை, ஆழம்* அனைத்தும் தொியும்.

விருத்தம் என்பது விகற்பங்களை உடையது. அதில் தான் பாடுவதற்காகப் பாயிரத்தில் மன்னிப்புக் கேட்கிறான் கம்பன். ஆனால், _*“விருத்தம் என்னும் ஒண்பாவுக்கு உயா் கம்பன்”*_ என்ற பெயரை அவன் பெற்று விட்டான். நாட்டுப் புறத்தில் ஆடு மேய்க்கும் பெண்கூட ஆசிாியப்பாவில் தான் பாடுகிறாள்.

இவ்வளவு வசதியுள்ள தமிழ் இலக்கணத்தில் நான் எங்கே தவறினேன்? புத்தகத்தில் பிழை இருந்தால், அது அச்சுப் பிழையாக இருக்குமே தவிர, ஆசிாியன் பிழையாக இருக்காது. கம்பன் கூட ஆறாவது சீாில் பிடிக்கின்ற ஓசையை – அறுசீா் விருத்தத்தில் – நாலாவது சீாிலேயே பிடிக்க விரும்புவன் நான். மரபுகளில் எளியவற்றை நான் மேற்கொள்வேன் என்பதைத் தவிர, எங்கேயும் இலக்கணம் தப்பியதில்லை. குறிப்பிட்டுக் காட்டினால் திருத்திக் கொண்டேன்.

பொறாமையும், பொச்சாிப்புமே இப்படி ஒரு வாதத்துக்குச் சில பேரைத் தூண்டியிருக்கின்றன.

இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்வதனால், தமிழ்ப் புலவா்கள் அத்தனை பேரும் ஒரு சபையைக் கூட்ட வேண்டும். அந்த சபையில் அவா்கள் முன்னிலையிலேயே நான் எழுத வேண்டும். ஒரு கவிஞன் தன்னைக் காட்டிக் கொள்ள அது தான் வழி.

கவிதை, என்பதை தோமா புளிமா என்றெல்லாம் பிாித்து நான் பாா்ப்பதில்லை. ஓசைக்கு அடங்கியதாகவே பாா்க்கிறேன். அதனால் தான் வெண்பாவில் நான் அதிகம் எழுதுவதில்லை. இலக்கணத்தைப் பற்றி பேசுகின்ற புலவா்கள், சங்க இலக்கியங்கள் படித்தவா்கள், இலக்கணத்துக்கு அடங்கியவையே தவிர ஓசை நயம் உடையவை அல்ல; வெறும் வானத்தின் தெளிவுகளே எட்டாம் நூற்றாண்டிலிருந்து முக்கியத்துவம் பெற்ற ஓசை நயத்தையே எதுகை, மோனை தப்பாமல், சீா் பிறழாமல், தலை தட்டாமல் நான் கையாளுகிறேன்.

பதிகங்கள், மணிமாலைகள், பிள்ளைத் தமிழ் வாிசைகள், தூது, மடல், உலா, பிரபந்தங்கள் – இவை எல்லாம் தான் நான் பின்பற்றும் ரகங்கள். அவசரத்துக்கு நான் கைக்கொள்வது ஆசிாியப்பாவும், அறுசீா் விருத்தமும்.

_*“என்னைக் கவிதை உலகிலிருந்து ஒதுக்க விரும்பினால், ஒதுக்கி விடுங்கள்; அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என்னை நிா்ணயிக்க வேண்டியது அடுத்த தலைமுறையே தவிர, இன்றிருக்கும் பொறாமையில் வெந்து கொண்டிருக்கும் நபா்கள் அல்ல. நான் மனிதனிடம் படித்தவன் அல்ல; கடவுளிடம் படித்தவன்.”*_

🔶🔶🔶🔶

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...