Skip to main content

*“உள்ளுணர்வு சொல்வதை..”*

அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள். உங்களுக்குப் பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்களாம்.

ஊருக்குச் செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக் கொள்வார்கள். எந்த ஊருக்குப் போக வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..,.

அது போல ஏதோ சோற்றுப் பாட்டிற்கு வேலை என்று, ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எல்லாம் சரி தான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர்.

வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையைக் கேட்டுப் பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த உலகம் நம் காதுபட சதா சொல்லி கொண்டு இருக்கிறது. அரசாங்க வேலைக்குப் போ…. நிறைய சம்பளத்துடன் மற்ற வகையில் நிறைய கிம்பளம் கிடைக்கும் என்று..

நல்ல இடத்தில் இருந்து பெண் கொடுப்பார்கள். சொந்தத் தொழில் இறங்கு. ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். நமக்கோ வாலிப வயசு, அனுபவமோ இல்லை. பெரியவர்களைச் சார்ந்தே பழகி இருக்கிறோம்.

எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்துக் கொள்கிறோம்.

பின் கொஞ்ச நாளில் நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன், இங்கே என்ற கேள்வி ஆத்ம சோதனை ஆக எழுகிறது. என்ன சாதிக்கிறேன், இதில் என்ற கேள்விக்குறி நம்மை வாட்டுகிறது.

இந்த செக்கு மாட்டு வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை, என் மனம் இதில் இல்லை. என் திறமைக்கு இங்கு வழி இல்லை என்ற எண்ணம் கோபமாக எழுகிறது.

உள்ளுணர்வால் உந்தப்பட்டு தன் வாழ்நாளில் தன் துறையைத் தேர்ந்தே எடுத்துக் கொள்பவர்கள், ஆத்ம திருப்தியை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.

தன்னை நம்புகிறார்கள், தன் காலில் நிற்கிறார்கள். தன்னால் சாதிக்க முடியும் என்ற பெருமையில் வாழ்கிறார்கள்.

தனக்கும், பிறருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன்படுகிறார்கள். அவர்கள் சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

சவால்களும், சோதனைகளும் தான் மனிதனது முழுத் திறமையை வெளியே கொண்டு வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.

*ஆம்,நண்பர்களே,*

*நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்.உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு அதன்படி நடங்கள்.*

*உங்கள் உள் மனம் கூறுவதைக் கவனியுங்கள்.*

*எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உங்களை எவ்வழியில் செல்ல உந்துகிறதோ அதன்படி நடங்கள்.,.🌺🙏🏻🌹*

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...