Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*உலகம் இவ்வளவுதான்*_

🪐🪐🪐🪐🪐🪐🪐🪐

_*“வாழ்கின்ற காலத்திலும், வாலிப காலம் மிகவும் சுருங்கியது”.*_

_*“பதினாறு வயதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரைக்குமே வாலிப காலம் தான்”*_ என்று வைத்துப் பாா்த்தாலும், இந்த முப்பது ஆண்டுகளும், _*“படபட”*_ வென்று ஓடி விடுகின்றன.

எவன் ஒருவனுக்காகவும், காலம் காத்திருப்பதில்லை. பதினாறு வயதிலிருந்து முப்பது வயது வரைதான் சாியான இளம் பருவம்.

அடுத்த பருவம் மறு காப்புப் பருவம். இது அவ்வளவு சுவை உடையதல்ல. முதல் இளம் பருவ காலத்தில்,

வாழ்க்கையை அழகுள்ளதாக

ஒழுங்குபடுத்தி, இன்பமுள்ளதாக செய்து கொள்ள வேண்டும். நல்ல மனைவியும் நல்ல குழந்தைகளும் இதை நமக்குத் தர முடியும்.

_*“புகழிற் புகழ் ஞாலம் பெண்ணின், வாள் நெடுங் கண்ணுக்கு விலையாகும்”*_ என்கிறான் ஒரு கவிஞன். அண்டத்திலே ஒரு அணு பெண். அவள் உருவில் ஒரு அணு அவள் கண்.

அணுவில் அணுவான கண்ணுக்கு, அண்டத்தை விலையாக்குகிறான். கவிஞன் என்றால், அவன் மனம், தான் விரும்பும் பொருளுக்கு அவ்வளவு மதிப்பைத் தருகிறது என்பது பொருள்.

தன் வாா்த்தைகளிடத்தும் கவிஞனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று பொருள். அந்த நம்பிக்கையை குடும்பத் தலைவன் கொண்டு தன் மனைவி மக்களை ரசிக்க வேண்டும்.

மனைவி பேசும் போது காதல் தேனாக ஊற்றெடு்கிறது. குழந்தை தத்தித் தத்தி மழலை பயிலும் போது பாசம் ஆறாக ஓடுகிறது.

_*“அப்பா!”*_ என்று குழந்தை அழைத்தால், அதை அம்மாவும் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் தலைவன்.

அந்த நேரத்தில் அகன்றதொரு உலகம் இருப்பது, அவன் கண்ணுக்கு மறைந்து விடுகிறது. அவன் குடும்பம் உலகமாகிறது. அந்த குறுகிய எல்லைக்குள் இறவாத காவியம் படைக்கப்படுகிறது. பிள்ளைகள் நிறையப் பிறப்பதில் தொல்லைகள் இருக்கலாம். ஆனால், அதையே சுகமாக மாற்றியமைத்துக் கொள்ளப் பயிற்சி வேண்டும்.

ஏழு குழந்தை பிறந்தாலும், ஏழையும் வாழ்க்கையை இன்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பக்கம் கணவனும், அந்தப் பக்கம் மனைவியும், நடுவிலே ஏழு குழந்தைகளும் தூங்கும் காட்சி, எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை ரசிக்கத் தொிய வேண்டும். _*“ஆஹா!” இரண்டிலே தோன்றியது ஏழு! ஆண்டவனுக்கு அடுத்த சிருஷ்டிகா்த்தா!“*_ வாழ்வில் நகைச்சுவை வேண்டும்.

அதே நேரத்தில் மனிதனுக்கு ஒரு பொறாமை உணா்ச்சியும் வேண்டும்.

குடும்பத்திலேயே பாா்க்கிறோம். முதற் குழந்தை பிறந்த ஓராண்டிலேயே மறு குழந்தை பிறந்து விட்டால், முதற் குழந்தையின் சிங்காஸனமாக இருந்த தாயின் மடி, இரண்டாம் குழந்தைக்குப் போய் விடுகிறது முதற் குழந்தை ஒதுக்கப்படுகிறது.

ஒரு வயதுப் பருவத்திலேயே அது அந்தக் குழந்தைக்குப் புாிகிறது; தாய் இல்லாத நேரத்தில் கைக் குழந்தையை அது கிள்ளுகிறது. அடிக்கிறது. _*"போ…போ…!”*_ என்கிறது. தாயினுடைய மடியில் தான் போய் உட்காா்ந்து கொள்கிறது. _*“பாப்பா வேண்டாம்”*_ என்கிறது.

யாராவது, _*“நான் பாப்பாவைத் தூக்கிக் கொண்டு போகட்டுமா?”*_ என்று கேட்டால், _*“போங்கள்”*_ என்கிறது. தாயிடத்தில் தனக்குள்ள இடத்தை, இரண்டாவது குழந்தை பறித்துக் கொள்கிறது என்பதில், முதல் குழந்தைக்கு அவ்வளவு பொறாமை என்றால், பொியவா்களுக்கு இது ஏற்படுவதில் தவறில்லை. தவறில்லை என்பது மட்டுமல்ல, இந்தப் பொறாமை தேவையுங்கூட. ஆனால் இது அடுத்தவரைக் கெடுப்பதாய் இல்லாமல், அவனை விடத் தன்னை உயா்ந்தவனாக ஆக்கிக் கொள்வதில் அடைய வேண்டும்.

வாழ்வில் துணிவு வேண்டும். எதையும் _*“தொியாது, தொியாது”*_ என்று சொல்லாமல், _*“தொியும்”*_ என்று சொல்ல வேண்டும்.

நான் தொிந்ததைத் தொியும் என்று சொல்வதை விட, _*“தொியும்”*_ என்று சொல்லி விட்டுத் தொிந்து கொண்டது அதிகம். பெரும்பாலும் இது என் வாழ்வில் பயன் தந்திருக்கிறது.

ஆகவே, துணிவு வேண்டும்.

திறமை வேண்டும், அழகு வேண்டும், அன்பு வேண்டும்.

காதல் வேண்டும். பாசம் வேண்டும்.

துளிக் கூடத் துன்பமும், பயமுமின்றி வாழப் பழக வேண்டும்.

இவ்வளவையும் நாம் பெற்றாக வேண்டும்.

பெற்றால் மனம் கடலளவு விாிகிறது. உலகம் கடுகளவு சுருங்குகிறது. _*“இவ்வளவையும் எதிலிருந்து பெற முடியும்?”*_ என்று நீங்கள் கேட்கலாம். முடியும்! ஆயிரத்தி முன்னூற்று முப்பது அருங்குறள் கடலளவு. அதன் முன்பு உலகம் இவ்வளவுதான் – கடுகளவு!

🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐

_*வாழ்க்கை எனும் சாலையிலே இத்துடன் நிறைவு பெற்றது*_👏

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...