Skip to main content

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.

அன்னை தமிழ் காக்க ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து உயிர் நீத்த தியாக தீரர்களை நெஞ்சிலேற்றுவோம்..

1. நடராசன்,

இறப்பு: 15.1.1939,

சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

2. தாளமுத்து,

இறப்பு: 12.3.1939,

சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

3. கீழப்பழுவூர் சின்னச்சாமி,

இறப்பு: 25.1.1964,

காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன்,

இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

6. சிவெகங்கை இராசேந்திரன், மாணவர். (மாணவர்)

இறப்பு: 27.1.1965,

சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

7. கீரனூர் முத்து,

இறப்பு: 4.2.1965,

கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

8. சத்தியமங்கலம் முத்து,

இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

9. ஆசிரியர் வீரப்பன்,

இறப்பு: 12.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

10. விராலிமலை சண்முகம்,

இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

11.பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர்,

இறப்பு: 2.3.1965,

கோவை பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர்,

1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

வீரவணக்கம்.!

வீரவணக்கம்.!!

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...