Skip to main content

பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்…

300-ரூபாய்

200-ரூபாய்க்கு வருமா ?

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்

சரி 250-ரூபாய் கொடுங்க…

பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது.

அண்ணே இந்த வழியா போனா

நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க…?

ரோட்டுக்கடைதான் சார்

அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ

அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,

நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு

விட்டு போலாம்

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு

புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு

வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.

ஒரு நடுத்தரவயது அம்மா,

அவரது நெற்றி மற்றும் தோற்றம்

அவர் கணவர் துணையற்றவர்

என சொல்லியது

வாங்க… இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.

இட்லி, தோசை என சாப்பிட்டோம்.

எவ்ளோம்மா ?.

60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க

100-ரூபாய் கொடுத்தேன்…

மீதியை… சில்லரையாக பொருக்கியது

அந்த அம்மா…

இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்

சில்லரை கஷ்டமுன்னாங்க…

சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே

இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா

வருவேன்… அப்போ வாங்கிக்கிறேன்

என்று கூறி புறப்பட்டனர்…

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு

போறீங்க… நாளைக்கு வருவேன்னு

சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு

ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா

நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.

அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்… இல்லையா ?

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப

இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம

உதவணும் அண்ணா

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,

அதன்மூலம் பொதுசேவை செய்வது,

புண்ணிய தலங்கள் செல்வது,

நன்கொடை கொடுப்பது, உண்டியல்

போடுவது என… இப்படித்தான்

புண்ணியம் தேட வேண்டும்

என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.

ஆட்டோ வீடு வந்து சேந்ததது…

இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட

250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.

200-ரூபாய் போதும்’

என்னாச்சு அண்ணா? என்றேன்…

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா

நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி

செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்

புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கணம் மூச்சு நின்றது

நான் போட்ட புண்ணிய கணக்கை

விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்

புண்ணிய கணக்கு !!!.

உதவியை உதவி என அறியாமலே

செய்துவிட்டு கடந்து விடுங்கள்…

புண்ணியம் நம்மை தேடி வரும்.💐👌🏻🙏🏻✨🎊👆🏻

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...