Skip to main content

செய்வதை துணிந்து செய்

சொல்கிறார் #பாரதி

டிசம்பர் 11 பிறந்த நாள்

• எந்தவொரு செயலை எடுத்தாலும். துணிந்து செய்.

• திறமை உள்ளவரிடம் பணியாளராக இருந்தாவது தொழிலை கற்றுக் கொள்

• கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.

• அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்து விட்டால் இன்பம் மறைந்து விடும்.

• அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கி விட்டால், நரக துன்பத்தை அனுபவிக்கும்நிலை உண்டாகும்.

• துன்பம் வரும் போது, கட்டுப்பாடு எனும் கடிவாளத்தால் மனதை இழுத்துப் பிடித்துக் கொள்.

• பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.

• அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும். தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும்.

• ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவரவர் கையில் தான் இருக்கிறது.

• வைரம் போல உடலை உறுதியாக மாற்று.உடல் வசப்படாவிட்டால் வாழ்வு நரகமாகி விடும்.

• ஒரு செயலை துவங்கும் போது அதன் பயன் இன்னதென்று தெரிந்தே செய்ய வேண்டும்.

• பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என மனதால் நினைத்தாலும் பாவம்.

• நல்லவரின் நட்பு, ஒருவனை அறியாமையில் இருந்து அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

• கடவுள் அறிவுக் கடலாக இருக்கிறார். அக்கடலில் நாம் ஒரு நீர்த்துளியாக இருக்கிறோம்.

******

அச்சம் தவிர்-நய்யப் புடை

மானம் போற்று-ரவுத்திரம் பழகு

ஆண்மை தவறேல்- தாழ்ந்து நடவேல்

சூரரை போற்று- தீயோர்க்கு அஞ்சேல்

ஓய்தல் ஒழி-நேர்பட பேசு

தாழ்ந்து நடவேல் -சாவதற்கு அஞ்சேல்

காலம் அழியேல்- கீழோர்க்கு அஞ்சேல்

போர் தொழில் பழகு -தோல்வியில் கலங்கேல் புதியன விரும்பு – வீரியம் பெருக்கு

கெடுப்பது சோர்வு- உண்மைக்கு அஞ்சேல்

வெடிப்பற பேசு – நன்று கருது

வவ்வுதல் நீக்கு -தவத்தினை நிரப்பு நீ

கற்றது ஒழுகு -கைத்தொழில் போற்று

சேர்க்கை அழியேல்-பேய்களுக்கு அஞ்சேல்

ஞாயிறு போற்று-மந்திரம் வலிமை

சவுரியம் தகுமே -எல்லாம் மெய் செய்

நாள் எல்லாம் மெய் செய்

#ksrpost

11-12-2022.

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...