Skip to main content

தனுஷ்கோடி

வரலாற்றில் இன்று டிசம்பர் 22,1964

வங்கக்கடலில் ஏற்பட்ட புயலால், 49 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்,(டிச.,22) நள்ளிரவில் தனுஷ்கோடி அழிந்த நாள் டிசம்பர் 22 

அழிந்து போன வணிக நகரம் தனுஷ்கோடி, தற்போது புயலின் எச்சங்களாக காட்சியளிக்கிறது.  

இலங்கையில் ராவணனை கொன்று, சீதையை மீட்டு வந்தபோது, ராமர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்கோடி (வில், அம்பு) என, ராமாயணத்தில் குறிப்பிட்டு உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ள இந்நகரம், 100 ஆண்டுக்கு முன்பு வணிக நகரமாக விளங்கியது. ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி நகரம் தான் பிரசித்தி பெற்று இருந்தது. 1914 ல், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடிக்கு "போட் மெயில்' என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் நடைபெற்றன. இந்நகரை, கடல் அலைகள், காணாமல் செய்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதே நாளில், அதாவது, 1964 டிச., 22 ல், இரவு 12.30 மணிக்கு, கடலில் ஏற்பட்ட புயலால், ராட்சத அலைகள் எழுந்து, தனுஷ்கோடியை தாக்கின. தூக்கத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், புயலின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகினர். 

தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், சர்ச், பள்ளி, மருத்துவமனை, தபால் நிலையம், பயணிகள் தங்கும் விடுதி, கோயில் உள்ளிட்ட பல கட்டடங்கள் சிதைந்தன. இதை தேசிய பேரிழப்பாக அறிவித்த மத்திய அரசு, தனுஷ்கோடியை மனிதர்கள் வாழ முடியாத பகுதி எனவும், அறிவித்தது.

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...