Skip to main content

பங்குனி உத்திரம் அறிய வேண்டிய தகவல்கள்

*
தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி. தமிழ் நட்சத்திரங்களில் 12வது உத்திரம். பங்குனி, உத்திரம்,பெளர்ணமி இணையும் நாளைதான் பங்குனி உத்திரம் என்று குறிப்பிடுவோம். அன்று மிகவும் விசேஷமான நாள். காரணம், நாம் பூஜிக்கும் கடவுள்களான சிவன்- பார்வதி, முருகன்-தெய்வானை, ராமன் – சீதை அவர்களின் திருமண வைபோகம் நடைபெற்றது. மேலும் லட்சுமி பாற்கடலில் அவதரித்த தினமும் அன்றுதான்.

*மன்மதனை எரித்து உஷ்ணத்தில் இருந்த சிவனை சாந்தப்படுத்த அவரை பார்வதி மணந்தார். மன்மதனுக்கு அளித்த தண்டனையால் பாதிக்கப்பட்ட ரதிக்கு

‘உன் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான்’ என பார்வதி வரம் தந்த நாள்.

*கொள்ளிட ஆற்றங்கரையில் ஸ்ரீ புலீஸ்வரி அம்மனின் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே சன்னதியில் ஏழு அம்மன்கள் உள்ளனர். அதில் புலீஸ்வரி என்பது வைஷ்ணவி. இங்குள்ள ஸ்தல மரம் வருடத்திற்கு ஒரே நாளான பங்குனி உத்திரம் அன்று மட்டுமே பூக்கும்.

*திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தும்புரு தீர்த்தத்தில் அன்று நீராடுவது மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுபட உதவும் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

*ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் ஓடும் காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்வர். முத்துக்குமார சுவாமி-வள்ளி தெய்வானை தம்பதியினராக உலா வந்து மக்களுக்கு தரிசனம் தரும் நாள். அன்று பக்தர்கள் முருகனுக்கு பஞ்சாமிர்தம் தயாரித்து, அபிஷேகம் செய்வது வழக்கம்.

*ஆன்மீக பக்தர்கள் இந்த நாளை பசுவாகிய ஆன்மா, பதியாகிய சிவனிடம் இணைவதாக கூறுவர்.

*இன்று பலர் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு பால்-பழம் மட்டும் சாப்பிடுவார்கள். இதனை ‘கல்யாண கந்தரவிரதம்’ என அழைப்பர்.

🙏🏻🙏🏻

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...